Monday, April 27, 2015

விடியல் காட்சி!
---------------------
கிழக்கில் கதிரவன் பொன்னொளியைத் தூவ
அழகழகாய்ப் பூக்கள் மலர்ந்து சிரிக்க
வரவேற்பைப் புள்ளினங்கள் பண்ணமைத்துப் பாட
கரவொலியைச் சோலை இலைகள் எழுப்ப
பொலபொல வென்றே விடியல் பொழுது
உலகில் விடிந்தது காண்.

0 Comments:

Post a Comment

<< Home