Tuesday, January 05, 2016

தாயை, தந்தையை வணங்கு!
-------------------------------------------------------------
இல்லை கடவுள்! .இருக்கு கடவுளென்றே
எல்லையற்ற வாதங்கள் சுற்றிச் சுழன்றாலும்
எல்லார்க்கும் நல்லது கெட்டது வந்துவந்து
துள்ளவைக்கும் உண்மையைப் பார்.

எதற்கிந்த வாதம்? எதற்கிந்த சாடல்?
கடவுளைப் பற்றிக் கவலைப் படாமல்
கடமையைச் செய்வதே வாழ்க்கை நெறியாம்!
நடமாடும் தெய்வங்கள் பெற்றோரை நாளும்
அகத்தில் வணங்கித்தான் போற்று.

0 Comments:

Post a Comment

<< Home