Sunday, February 14, 2016

பண்புத்தொகை

பண்புத்தொகை

செம்மை பசுமையும் வெண்மை கருமையும்
கண்ணைக் கவரும் நிறத்தைக் குறிப்பதா கும்!
தண்மதியே! வட்டம் சதுரம் எனவருதல்
பண்பில் வடிவம் குறிப்பதாகும் பார்பார்பார்!
நன்மையும் தீமையும் மாந்தரின் குணக்குறிப்பாம்!
ஒன்றை இரண்டைக் குறிப்பதெல்லாம் எண்ணிக்கை
அம்மா! இவையுடன் சேர்ந்த பெயர்ச்சொற்கள்
பண்புத் தொகையாம் உணர்.

0 Comments:

Post a Comment

<< Home