Friday, March 18, 2016

புலவர் இளங்குமரனார்

முகவை இராமானுசரின்
கற்கும் தாகம்
-------------------------------------------------

கவிராயர் வீட்டிற்குள் வந்தார் ஒருவர்
புவிபோற்றும் அய்யாவே! கற்பதற்கு வந்தேன்!
தவிக்கும் எனக்கந்த வாய்ப்பை மறுத்தால்
அளிக்கவில்லை வாய்ப்புதனை என்றென் கழுத்தை
அரிந்தேதான் சாவேன் என்றுரைத்தார் அய்யோ!
அரிவாளும் கையுமாய் கல்வித் துடிப்பைத்
தெளிவாய் உணர்ந்துகொண்டு கற்றுத் தருவேன்
உயிரை விடாதே! கலங்காதே என்றார்!
தெளிவாக நன்னூல் பிறநூல்  உரையை
அளித்த முகவை இராமா னுசனார்
கவிராயர் ஆன நிகழ்வு.

நன்றி:
நூல் இனிக்கும் இலக்கணம்
ஆசிரியர்:
புலவர் இரா.இளங்குமரனார்

0 Comments:

Post a Comment

<< Home