Wednesday, March 09, 2016

பார்த்துப் பழகு!

பரபரப் பான நட்பில்
பக்குவத் தெளிவே இல்லை!
எவரது நட்பென் றாலும்
ஏற்பதற் குள்ளே யோசி!

நல்லவர் தானா? அன்றி
பொல்லா தவரா? என்றே
உள்ளத் தாலே கணித்து
உறவிழை பின்ன வேண்டும்!

வலையிலே சிக்கிய மீனாய்
வம்பினில் மாட்டிக் கொண்டே
நிலைதடு மாற வேண்டாம்!
நிம்மதி இழக்க வேண்டாம்!

0 Comments:

Post a Comment

<< Home