Sunday, March 20, 2016

மழை

விழுந்து விழுந்து  மலையை நனைத்து
நழுவி நழுவி நதியாய் மணலைத்
தழுவித் தழுவிப் பரவிப் படர்ந்தே
உருண்டு திரண்டு கடலில் கலந்தே
உருவை இழக்கும் மழை.

கடலில் கலந்த மழைநீரை வெப்பம்
சுடச்சுட ஆவியாய் மாற்றிட, மேகம்
மடமடவென்றே முகந்தே சேர்த்துச்
சடசட வென்று மழையைப் பொழிய
தொடர்கதை இந்தப் பொழிவு.

0 Comments:

Post a Comment

<< Home