Sunday, June 26, 2016

நடமாடும் தெய்வங்கள்

அறிய முடியாத ஒன்றை  நித்தம்
அறிந்ததுபோல் ஆண்டவன் என்போம்--அறிந்துணரும்
பெற்றோர் நடமாடும் தெய்வங்கள் என்றாலும்
எத்தனைபேர் போற்றுகின்றார்? சொல்.
பெற்றோரை வாழ்த்து

வாழ்கின்ற காலத்தில் பெற்றோரை வாயார
வாழ்த்துங்கள்! பெற்றோர் மனங்குளிரும்! சென்றபின்பு
வாழ்த்தும் படையலும் யாரறிவார்? கண்மணியே!
வாழ்த்தி மகிழப் பழகு.

0 Comments:

Post a Comment

<< Home