Monday, June 20, 2016

இயற்கையின் கவிதை

விடியல் பொழுது
விடிகிறது
பறவைக் கூட்டம்
பறக்கிறது
கடலின் அலைகள்
எழுகிறது
விண்ணைத் தொடவும்
முயல்கிறது
சோலைப் பூக்கள்
மலர்கின்றன
நறுமணம் இங்கே
தவழ்கிறது
உழவர் கூட்டம்
நடக்கிறது
உழைப்பின் மகத்துவம்
உரைக்கிறது
வாசலில் வண்ணக்
கோலங்கள்
வகைவகை யாக
பூக்கிறது
இயற்கை எழுதும்
கவிதையிது
இதயம் ரசித்து
மகிழ்கிறது

0 Comments:

Post a Comment

<< Home