Sunday, June 26, 2016

கதைக்குக் கவிதை
நண்பர்
திரு.பாலுநடராஜன் சொன்ன கதை

அம்மாவிடம் கோபித்து மைந்தன் வெளியேற
கண்ணா! தெருவோரம் செல்கின்ற நேரத்தில்
அங்கே புளியமரம் கீழே நடந்துசெல்!
என்றுனக்கு அம்மா நினைவு வருகிறதோ
அன்று திரும்பி வரும்போது வேப்பமர
தண்ணிழலில் நீயும் நடந்துவா என்றாளாம்!

புளியமரக் காற்று நலங்கெட வைக்கும்!
நலமளித்துக் காப்பதோ வேப்பமர மாகும்!
நலங்கெட்டான்! அம்மா நினைவுவர மைந்தன்
மனைநோக்கி வந்தான் விரைந்து.

0 Comments:

Post a Comment

<< Home