Monday, August 01, 2016


105  விதையினைத் தெரிந்து இடு

                   1
எந்தப் பருவத்தில் எந்தவிதை போடவேண்டும்
என்றே அறிந்துகொண்டு மண்ணில் பயிரிட்டால்
அந்தப் பயிர்செழிக்கும்! நாட்டில் வளங்கொழிக்கும்!
கண்டபடி நட்டால் இழப்பு.

                     2
நேரம் பருவம் அறிந்தே செயல்பட்டால்
காலம் கனிந்துவந்தே திட்டம் நிறைவேறும்!
நேரம் தவறினால் குழப்பம் முடிவாகும்!
வேரூன்ற நற்பருவம் பார்

0 Comments:

Post a Comment

<< Home