Saturday, December 31, 2016

பகற்கொள்ளை

மீன்பிடிக்கும் எங்கள் படகுகளை நாட்டுடைமைத்
தூண்டிலுக்குள் சிங்களர்கள் சிக்கவைத்தும்  இந்தியா
ஏனிங்கே மாற்றாந்தாய்ப் பார்வையைப் பார்க்கிறது?
ஊனமனப் போக்கேனோ? சொல்.

தமிழர்கள் என்றால் இரண்டாந் தரமோ?
தமிழர்கள் கிள்ளிவிடும் கீரை வகையோ?
தமிழர்கள் இந்தியர்கள் அன்றியே வேறோ?
தமிழினமே! ஏனிந்தத் தாழ்வு?

0 Comments:

Post a Comment

<< Home