Friday, March 17, 2017



புறக்கணிக்காதே!

உலக அளவில் தமிழர் திரண்டார்!
கலகமில்லை வன்முறை இல்லவே இல்லை!
எழுச்சியைப் பார்த்து விரைவிலே தீர்ப்பை
எழுது விவேக மாய்.

தமிழ்நாடு என்றவொரு காரணத்தால் இங்கே
தமிழனின் சிக்கலைக் கேட்க மறுக்கும்
இழிநிலை உள்ளதென்ற உள்ளுணர்வே இந்த
எழுச்சியின் பின்னணி பார்.

0 Comments:

Post a Comment

<< Home