Friday, October 13, 2017


டெங்கு- எச்சரிக்கை! (09.10.17)

நன்னீரில் உற்பத்தி யாகும் கொசுக்களால்
டெங்கு பரவுதென்றே சொல்கின்றார்-- நம்பங்காய்த்
தண்ணீரைத் தேங்க விடாமல் தடுக்கவேண்டும்!
டெங்கைத் தவிர்க்கலாம் நம்பு.

நிலவேம்பு வேர்ப்பொடியை தண்ணீரில் சேர்த்துக்
கலந்தே இருடம்ளர் ஒன்றாகும் மட்டும்
இளஞ்சூட்டில் சுண்டவே காய்ச்சிப் பருகு!
கலங்கவைக்கும் டெங்கைக் குணப்படுத்தும் நல்ல
மருந்தென்றே சொல்கின்றார் கேள்.

டெங்கைப் பரப்பும் கொசுக்கள் காலையில்
வன்முறையை ஏவும்! எதிர்ப்பு வலிமை
நம்முடம்பில் இல்லையென்றால் பாதிக்கும் நம்மை!
அன்பே! கவனமுடன் வாழ்.

0 Comments:

Post a Comment

<< Home