Thursday, October 05, 2017

 மண்பானை

உள்ளும் புறமும் குளிர்ச்சியாய் நீஇருக்கும்
நல்ல இரகசியம் என்னவோ? மண்பானை
சொல்வாயா? என்றுகேட்க பானையோ மாந்தனே!
இவ்வுலக மண்ணில் தொடங்கியே மண்ணிலே
நல்லடக்கம் ஏற்பேன்! இதையுணர்ந்தேன்! வாழ்விலே
உள்ளகத்தைச் சூடாகா வண்ணம்நீ பார்த்துக்கொள்!
நல்லவண்ணம் வாழலாம் பார்.

0 Comments:

Post a Comment

<< Home