Wednesday, December 06, 2017

குழந்தையும் பொம்மையும்!
கணவனும் மனைவியும.

குழந்தையிடம் பொம்மை கிடைத்துவிட்டால் போதும்
குழந்தையோ இப்படி அப்படி ஆட்டும்!
தரைமீது தூக்கி எறியும்! சிரிக்கும்!
அலைபாயும் உள்ளம் உவந்து.

தன்விருப்பம் போல நடக்கவேண்டும் என்றேதான்
என்னென்ன செய்யும்? அடிபணிய வைத்தேதான்
கொஞ்சும் மகிழும் வலிக்கிறதா என்றேதான்
நெஞ்சுருக்க் கேட்கும் அழுது.

இப்படித்தான் வாழ்வில் ஒருவர்மேல் அன்புவைத்தால்
அப்படி இப்படி ஆடவேண்டும் என்றேதான்
எப்பொழுதும் இங்கே எதிர்பார்ப்போம்! ஏக்கமுடன்!
சற்றே தடம்புரண்டால் வாடி வதங்கிடுவோம்!
இப்பற்றின் பண்பே இது.

0 Comments:

Post a Comment

<< Home