Saturday, April 21, 2018

இனியவை நாற்பது

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

பாடல் 15

பிறன்மனை பின்னோக்காப் பீடினி தாற்ற
வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே
மறமன்னர் தங்கடையுள் மாமலைபோல் யானை
மதமுழக்கங் கேட்டல் இனிது. 15
---------------------------------------------------------------------------------
பிறன்மனை நோக்கா, பெருமை இனிது!
வறண்டேதான் வாடும் பயிர்களுக்கு வானம்
மடமட வென்றே பொழியும் மழையால்
முகப்பொலிவு காணல்  இனிதா கும்! வீறு
நடைபோடும் வேந்தன் அரண்மனையில் வேழம்
குடல்நடுங்க நின்றே பிளிறுதல் கேட்கும்
மறவொலி என்றும் இனிது.

0 Comments:

Post a Comment

<< Home