Saturday, April 21, 2018


இனியவை நாற்பது

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

பாடல் 16

கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே
;மிக்காரைச் சேர்தல் மிக மாண முன் இனிதே;
எள் துணையானும் இரவாது தான் ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது.
-----------------------------------------------------------------------
படித்தவர்கள் முன்னே தன்னுடைய கற்ற
படிப்பறிவைச் சொல்தல் இனிதே! சிறந்த
அறிஞர் துணைகொள்ளல்  வாழ்வில் இனிது!
சிறிதே எனினும் பிறரிடம் கேட்கும்
சிறுமையோ இன்றிக் கொடுத்தல் இனிது!
பொறுப்புடன் வாழ்தல் இனிது.

0 Comments:

Post a Comment

<< Home