Wednesday, January 23, 2019

ஒத்துழைப்போம்!

திருவிழாக்கள் வந்தால் தெருவெல்லாம் குப்பை
பெருகிக் குவியும் மலைபோல எங்கும்!
பெருக்கியும் வாரியும் துப்புரவுத் தொண்டைத்
தெருவிலே  கடமையாய் எண்ணிப் புரிவார்!
ஒருநாள் வரவில்லை,துர்நாற்றம் வீசும்!
தெருக்களிலே தொட்டிகள் வைத்திருந்த போதும்
செருக்குடனே  மக்கள் வெளியிலே வீசி
தெருவெல்லாம் குப்பை சிதறிவிழும் கோலம்!
இருகரம் இங்கே இணந்தால்தான் தூய்மை
அரங்கேறும்!  ஒத்துழைப்போம் நாம்.

0 Comments:

Post a Comment

<< Home