Monday, April 29, 2019

இயற்கை யான வாழ்க்கை!
இயல்பான வாழ்க்கை!

பல்தேய்க்க உப்பைப் போடு
தோலுக்குப் பாசிப் பயறு
முகத்துக்கு மஞ்சள் பூசு
பளிச் சென்று முகமே மாறும்!

காலையில் நீரா காரம்
சுவையாய்நீ குடித்துப் பாரு!
சிற்றுண்டி கம்பங் கூழு
குளிர்ச்சிதான் உடலுக் கிங்கே!

மதியமோ பழைய சோறு
ஊறுகாய் வைத்துத் தின்றால்!
பசிதான் பறந்தே போகும்!
எக்குப்போல் உடலே மாறும்!

இரவிலே களியைத் தின்று
தரையிலே படுத்துத் தூங்கு!
விடியலை எழுப்பி விட்டு
வயலிலே உழைக்க வேண்டும்.

மதுரை பாபாராஜ்





0 Comments:

Post a Comment

<< Home