Wednesday, July 10, 2019

 நீ எங்கே?

என்னைக் கரம்பிடித்து வந்தவளோ விட்டுவிட்டாள்!
தன்னந் தனியாகத் தள்ளாடிக் காரிருளில்
ஒன்றும் தெரியாமல் தட்டுத்  தடுமாறி
என்னவளைத் தேடுகின்றேன் எங்கோ சிரிக்கின்றாள்!
அந்தச் சிரிப்பொலி எந்தன் செவிகளில்
வந்து தழுவி வருடி நழுவுதே!
கண்ணீர்த் திவலைகள் பட்டுத் தெறிக்கிறதே!
கன்னங்கள் சூட்டை உணர்கிறதே! என்னவளே!
எங்கேநீ சென்றாய்? தனியாய்த் தவிக்கவிட்டு!
என்ன தவறுசெய்தேன்? சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home