Friday, July 05, 2019

இயல்பாகப் பழகு!

சூழ்நிலைகள் சந்தேகத் தீப்பொறியைத் தூண்டிவிட்டால்
வாழ்க்கை இருளாகும்! உள்ளம் உளைச்சலின்
தேள்கடியில் நாளும் துடிதுடித்தே
வாடிவிடும்!
சூழ்நிலையை என்றும் தவிர்.

இயல்பான சூழ்நிலையில் சந்தேகம் இல்லை!
இயல்புக்கு மாறாய்ப் பழகுவதைக் கண்டால்
புயலுக்குள் சிக்கும் துரும்பாகும் உள்ளம் !
இயல்பாக என்றும் பழகு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home