Monday, July 01, 2019

அன்பு வானில் களங்கம்!

சூழ்நிலைகள் வறுத்தெடுத்தால்!

என்னன்பு நீலவானம்  எந்தக் களங்கமும்
இன்றித்தான் வாழ்வில் இருக்குமென்றே
எண்ணினேன்!
என்னை வதைத்தெடுக்கும் வண்ணம் களங்கத்தை
இங்கே அனுமதித்த தேன்?

சூழ்நிலைகள் வாழ்க்கையில் தீப்பொறியைத் தூண்டிவிட்டுப்
பாழ்மனத்தில் நாளும் உளைச்சலை ஏற்படுத்திப்
பார்க்கின்ற  கோலத்தில் தூக்கம் இழந்தேதான்
ஏழையாய் ஏங்குகிறேன் இங்கு.

என்னென்ன சூழ்நிலைகள்! அப்பப்பா! போதுமே!
கண்முன் திரைப்படம்போல் ஓடுகின்ற காட்சிகள்!
அன்பின் உருவத்தை ஏனோ சிதைத்தேதான்
இன்பமுறும் வக்கிரத்தைப் பார்.

மதுரை பாபாராஜ்




0 Comments:

Post a Comment

<< Home