Sunday, June 30, 2019

வலி!

உள்ளத்தில் ஓடும் உணர்ச்சிகளைச் சொற்களாக்கி
அள்ளித் தெளித்தேதான் ஆறுதலை நாடுகின்றேன்!
சொல்லி முடித்ததும்  ஒன்றும் தெரியாத
தைப்போல
மெல்ல நகர்ந்தேதான்  எந்தச் சலனமும்
இல்லாமல் சென்றால் இதுவரை சொன்னதில்
எள்ளளவும் உண்மையே இல்லையா? பொய்தானா?
உள்ளத்தைத் தைத்த கணைவலி போகவில்லை!
சொல்வாயா ஆறுதலை  நீ?

மதுரை பாபாராஜ்




0 Comments:

Post a Comment

<< Home