Friday, June 28, 2019

கவிஞர்கள் சங்கமம்

28.06.19

இன்றைய தலைப்பு

நாற்காலி!

நாட்டிலும் வீட்டிலும் எங்கேநாம் சென்றாலும்
நாற்காலி இல்லா இடங்களே இல்லையென்பேன்!
ஆற்றல் மிளிரத் தச்சர் உழைப்பாலே
தோற்றம் பெறும் இது.

விளையாட்டில் கூட இசைநாற் காலி
களைகட்டிப் பார்க்கும்! குழந்தை முதலாய்
நரைவிழுந்த தாத்தாக்கள் பாட்டிகள் நாடும்
விளையாட்டுப் பொருளாகும் இங்கு.

ஆட்சியைக் கைப்பற்றி மக்களுக்குத் தொண்டாற்ற
நாற்காலி ஆசையே தேர்தலில் காரணமாம்!
நாட்டில் பணிநிறைவு செய்தபின் அன்றாடம்
வீட்டுக்குள் ஓய்வெடுப்போம் உட்கார்ந்து
பேசுவோம்!
காற்றாட சாய்ந்தால் மகிழ்வு.

இருந்த நிலையிலும் கைகொடுத்த நண்பன்!
இருப்பை இழந்தே இறந்த நிலையில்
ஒருவாறாய் உட்கார வைத்தே வணங்க
வருவோர்க்கு வாய்ப்பளிக்கும் நாற்காலி தானே!
பெருமிதம் நாற்காலிக் குண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home