Wednesday, June 26, 2019

பட்டமரம்!

அற்புத மானவன் என்பார் சிலரிங்கே!
அற்பமான வன்தான் எனச்சொல்லும் மாந்தருண்டு!
குற்றமென்ன செய்தேன்? எனக்கே புரியவில்லை!
இப்படியா? அப்படியா? யார்சொன்ன போதிலும்
வற்றிவிட்ட ஏரிதான் நான்.

வற்றிவிட்ட ஏரிக்கோ என்றும் மதிப்பில்லை!
சுற்றிவிட்ட பம்பரம் நின்றால் மதிப்பில்லை!
கொட்டிவிட்ட பாலை எவரும் மதிப்பதில்லை!
எத்திவிட்ட பந்துக்கும் இங்கே மதிப்பிருக்கும்!
பட்டமரத் திற்கா மதிப்பு?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home