Monday, June 24, 2019

வேலிக்குள் நிம்மதி!

வேலிக்குள் நிம்மதியாய் வாழ்ந்திருந்த காலம்போய்
வேலிதாண்டிச் சென்றதால் வேதனையில் வாழ்கின்ற
கோலத்தை ஏந்தும் கொடுமைக்கே உள்ளானோம்!
காலமே மாற்றவழி காட்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home