Tuesday, June 18, 2019

இறுதியில் தனிமையே!

 இறுதியில் தனிமையே!

தனியாய்ப் பிறந்தோம்! தனியாய் வளர்ந்தோம்!
அணியணியாய்ச் சேர்ந்தே குடும்பம் அமைத்தோம்!
இனிமையாய்  இன்பம்! கசப்பாகத் துன்பம்!
முனைப்புடன் மாறிமாறி வாழ்க்கையில் தாக்க
அணைக்கும் முதுமைப் பருவம் தனியாய்த்
துணையின்றி நம்மைத் தவிக்கவைக்கும் இங்கே!
துணையும் துணைக்கு வரத்தயங்கும் வாழ்க்கை!
தனியே உலகில் பிறப்பும் இறப்பும்!
தனிமைத் துணையே துணை.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home