Friday, June 14, 2019

பயணத்தில்!

யார்முந்தப் போகின்றார்? வாழ்க்கைப் பயணத்தில்?
நீமுந்திப் போய்விட்டால் என்னை மதிப்பாரோ?
நான்முந்திப் போய்விட்டால் உன்னை மதிப்பார்கள்!
வான்மழை போல உதவும் உள்ளத்தால்
தூண்போலத்  தாங்கிப் பிடிப்பாய்க் குடும்பத்தை!
நானிருந்தால் மேலும் சுமையாகித் தத்தளிப்பேன்!
நீதானே எந்தன் உயிரோட்டம்! கண்மணியே!
நீயின்றி் நானில்லை! நானின்றி நீயுண்டு!
நீதானே என்னியக்கக் கூறு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home