Saturday, June 08, 2019

கொடுத்துவைத்த இல்லம்!

குழந்தைகள் வந்துபோகும் வீடு
அது
குதூகலம் தவழ்கின்ற கூடு!

இடையூறு இருந்தாலும் இன்பம்
அங்கே
நெருங்காது எக்காலும் துன்பம்!

விளையாடும் நேரத்தில் சண்டை
அய்யோ
கோபங்கள் கொந்தளிக்கும் விந்தை!

டூபோட்டுச் செல்வார்கள் உடனே
அட
போங்களென்றும் சொல்வார்கள் அங்கே!

ஐந்துமணித் துளிகளுக்குள் சேர்வார்
ஆகா
சண்டையை மறந்தேதான் மகிழ்வார்!

இப்படித்தான் குழந்தைகள் உள்ளம்
கண்ணே
நாள்தோறும் மகிழ்ச்சியிலே துள்ளும்!

குழந்தைகள்  பேசுவது  வெல்லம்
அந்த
மழலைக்கு ஈடுண்டோ சொல்லு?

மதுரை பாபாராஜ்






0 Comments:

Post a Comment

<< Home