Saturday, June 08, 2019

மறக்க முடியவில்லை!

என்னைப் பிடிக்கவில்லை! ஏனோ தெரியவில்லை?
என்னை நெருப்பிற்குள் தள்ளிச் சிரிக்கின்றாள்!
என்ன அணுகுமுறை இந்த அணுகுமுறை?
கண்ணீர் வழிந்தாலும் நானோ சிரித்தேதான்
இங்கே மறைக்கின்றேன் நொந்து.

என்மனதை எப்படித்தான் மாற்றிக் கணித்தாலும்
எங்கெங்கோ சுற்றி அலைந்தேதான் மீண்டுமிங்கே
என்னைத் தொடங்கிய புள்ளிக்கே கொண்டுவந்து
புண்படுத்திப் பார்ப்பதேன்சொல்?.

இப்படிக் கோலமோ? இல்லை இருக்காது!
அப்படிக் கோலமோ? சேசே! இருக்காது!
முற்றும் அழித்தாலும் முந்திவந்தே நிற்கிறதே
பட்டபாடு! என்செய்வேன்? நான்.

சென்றதெல்லாம் செல்லட்டும் என்றே புதிதாக
என்மனதை மாற்றி நினைப்பேன்! நினைத்ததும்
அங்கே புதிதாக  என்னைக் குதறுகின்ற
வண்ணம் துடிதுடிக்க வைக்கும் நிகழ்வொன்று
முன்வந்தே துன்பம் தரும்.

காலில் விழவேண்டாம்! காவடித் தூக்கவேண்டாம்!
கால்களை வாரி விடவேண்டாம்! உண்மையாய்
உள்ளத்தில் அன்பு மரியாதை தந்தாலே
நல்லவ ராவார் உணர்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home