Monday, June 03, 2019

யாரோ?

உணர்ச்சியைத் தந்த  தாரோ?
 உளைச்சலைத் தந்த தாரோ?
அனலினில் உருட்டிய தாரோ?
 அலைகளில் புரட்டிய தாரோ?

இருட்டிலே பூட்டிய தாரோ?
 இரும்பினைச் செருகிய தாரோ?
உருவினைக் குலைத்த தாரோ?
 உளத்தினைத் துளைத்த தாரோ?

அமைதியைக் கலைத்த தாரோ?
 அமளியை விதைத்த தாரோ?
சுமைகைளை ஏற்றிய தாரோ?
 சுடச்சுட சுட்டது  யாரோ?

படுவதை ரசிப்ப தாரோ?
 பட்டதன் காரண  மாரோ?
சுடுமணல் வீசிய தாரோ?
 துடிப்பதை ரசிப்ப தாரோ?

மதுரை பாபாராஜ்
03.06.19











0 Comments:

Post a Comment

<< Home