Thursday, May 09, 2019

மதுரையில் எங்கள் வீட்டுப் பிள்ளை!

நரவண்டி ஓட்டுநர்!

காசிக்கு இரங்கற்பா!

09.05.19

அய்ம்பதாண்டு காலமாய் இல்லற வாழ்விலே
தொய்வின்றி உழைத்த நரவண்டி ஓட்டுநர்!
அல்லும் பகலும் அயராமல் தொண்டாற்றி
நல்லறத்தைப் பின்பற்றி நல்லவராய் வாழ்ந்தவர்!
எல்லார்க்கும் நல்லவர் தான்.


என்னுடைய தந்தை அலுவலகம் செல்வதற்குக்
கண்ணுங் கருத்துமாய் நேரத்தே வந்தேதான்
அன்றாடம் தன்கடமை ஆற்றி மகிழ்ந்தவர்!
நம்பித்தான் எங்களது வீட்டை ஒப்படைத்துச்
சென்றிடுவோம்! காத்திருப்பார் காண்.

எங்களின் இல்லக் குழந்தைகள் பள்ளிக்குச்
சென்றுவரத் தொண்டுசெய்தார்! நோய்களின் வேதனையா
பொன்மனங் கொண்டே
மருத்துவம் பார்ப்பதற்கு
எங்கெனினும்  வந்தார் விரைந்து.

சென்றமாதம் எந்தன் தமக்கையின் வீட்டுக்கு
வந்திருந்த ஈரமோ காய்வதற்குள் சென்றுவிட்டார்!
அன்பகமாய்ப் பண்பகமாய் வாழ்ந்து மறைந்துவிட்டார்!
கண்ணீர்தான் காணிக்கை யாம்.


அப்படிப் பட்ட அருமையான காசியோ
சட்டென்றே நீடுதுயில் கொண்டுவிட்டார்!
என்செய்வோம்?
எப்பொழுதும் எங்கள் நினைவில் இருந்திடுவார்!
இப்பிறவி வாழ்வில் உறவாடி ஒன்றிவிட்டார்!
எப்படித் தான்மறப்போம் சொல்.


என்றும் நன்றியுடன்
மதுரை பாபாராஜ் குடும்பத்தார்





0 Comments:

Post a Comment

<< Home