Saturday, May 04, 2019


ஏக்கம்!

வேண்டுகின்ற நேரம் குழந்தைக்குப் பெற்றோரின்
தீண்டும் சிறகுகள் தேவையிங்கு கண்மணியே!
எத்தனைக் கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும்
ஒட்டி உறவாடும் பெற்றோருக் கீடாமோ?
முத்துமுத்தாய்ப்  பிள்ளைகள் அங்கங்கே  காத்திருக்க
பெற்றோர் வருவார் களைத்து.

மதுரை பாபாராஜ்

Kavignarkamalkumar:
ஆம். கடைசி இருவரிகள் பொருள் பொதிந்தவை.

பிள்ளைகளை வெளிநாடு அனுப்பி விட்டுப் பெற்றவர்கள் ஏங்கி நிற்பார்.

அந்தப் பிள்ளைகள் மேலும் தவறில்லை. பெற்றோர் வரமாட்டார்களா என்று ஏங்கி முத்து முத்தாய்க் காத்திருப்பர்.

வருடம் ஒருமுறையோ இரண்டு வருடத்திற்கு ஒருமுறையோ தங்கள் தள்ளாத வயதில் பெரும்பாடு பட்டு 25 அல்லது 30 மணிநேரம் பயணம் செய்து அலுத்துக் களைத்து வருவார் பெற்றோர்.

நடைமுறை அவலத்தை நன்கு சித்தரிக்கிறது இந்தக் கவிதை.

நன்று.

0 Comments:

Post a Comment

<< Home