Friday, May 03, 2019

ஏன்?

கடனுக்குள் மூழ்கித்தான் தத்தளித்த போதும்
தடங்கல் திரண்டே வழிமறித்த போதும்
அடலேறாய் நெஞ்சை நிமிர்த்தித்தான் வாழ்ந்தேன்!
கடனில்லை, ஒன்றும் குறைவில்லை இன்று!
படபடப்பில் வாழவைத்துப் பார்க்கிறதே காலம்!
சுடரொளி வீசினாலும் காரிருளில் கண்கள்
தடவித்தான் செல்லவைப்ப தேன்?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home