Wednesday, May 15, 2019

தமிழகமே தமிழ்மறந்தால்
தமிழ்மொழியை யார்படிப்பார்?


தமிழகமே தமிழ்மறந்தால்
தமிழ்மொழியை யார்படிப்பார்?
தமிழ்த்தாய்க் கண்ணீரை
அன்புடன் யார்துடைப்பார்?

பாராண்ட தமிழ்மொழியே
பரிதவிக்கும் கோலமேனோ?
கூவாத குயிலாக்கி
குரல்தன்னைத் தடுத்ததுயார்?

ஆடாத மயிலாக்கிச்
சிறகுகளை முறித்ததுயார்?
ஓடாத நதியாக்கி
பாலையாக மாற்றியதார்?

விழித்தெழு தமிழினமே
விவேகமாய்ப் போராடு!
எழுச்சிநடை தமிழ்போடும்!
என்றுமே வெற்றிதான்!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home