Friday, June 14, 2019

படைப்பும் படிப்பும்!

படைப்பாளர் இங்கே எழுதிவைத்துச் சென்றார்!
படைப்பைப் படித்தவர்கள் தங்கள் கருத்தைப்
படைப்பாளர் இப்படி அப்படி என்றே
உடைக்கின்ற போக்கு சரிதானா? சொல்லின்
கறைபடியா மெய்ப்பொருளைத் தந்தால் விவேகம்!
அதைவிட்டுத் தங்கள் வழியில் வளைத்து
நிறைகுறை காண்பதோ தீது.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home