Friday, June 14, 2019

வேரிழந்த மரம்!

சொல்லொன்றை வீசினாள்! அய்யகோ சொல்லல்ல
முள்ளாகி உள்ளத்தைத் தைத்துத் துடிக்கவைத்துச்
சுள்ளென்றே குத்திக் கிழித்தது!  தூக்கமோ
தள்ளி விலகியது! சாற்று.

வாளெடுத்துக் குத்திக் கிழித்திருந்தால் தூக்கமுண்டு!
வேலெடுத்தே பாய்ச்சும் நிலையெடுத்தால் தாங்குவேன்!
தேள்களை மேயவிட்டால் பார்த்தே ரசித்திருப்பேன்!
ஆழமாகச் சொல்லை இதயத்தில் பாய்ச்சிவிட்டாள்!
வேரிழந்த மரமானேன் நான்.

சொல்லெல்லாம் தீப்பிழம்பு! இப்படியுப் அப்படியும்
உள்ளப் பரப்பெல்லாம் பற்றிப் படர்ந்தேதான்
துள்ளித் துடிக்கவைத்து வேடிக்கை பார்க்கின்றாள்!
சொல்லி அடிக்கின்றாள் ஏன்?

மதுரை பாபாராஜ்
13.06.19


0 Comments:

Post a Comment

<< Home