Tuesday, June 18, 2019

ஓரெழுத்துக் கவிதை!

பூவுக்குத் தேனுறவா? தேனுக்குப் பூஉறவா?
பூவுக்கு வண்டுறவா? வண்டுக்குப் பூஉறவா?
பாவுக்குச் சொல்? சொல்லுக்குப் பாஉறவா?
ஆவுக்குப் பாலுறவா? பாலுக்கே ஆஉறவா?

காவுக்குத் தென்றலோ? தென்றலுக்குக் காஉறவோ?( சோலை)
கூதான் குயிலுறவோ? அந்தக் குயிலுக்குக்
கூஉறவோ?( கூவுதல்) கூவுக்( உலகம்) குறவே
இயற்கையோ?
தூவுக்குத்( வெண்மை) தூய்மை உறவுதானோ? தூய்மைக்கே
தூஉறவோ? பாலுறவோ? வெண்பஞ் சுறவுதானோ?

பேவுக்கு( மேகம்) வானுறவோ? வானுக்குப் பேஉறவோ?
நாவுக் குறவிங்கே வன்சொல்லா? இன்சொல்லா?
நேவுக்கே என்புறவோ? என்புக்கு  நேஉறவோ? ( அன்பு)
நூவுக்கு( யானைக்கு) நீள்துதிக்கை என்றும் உறவாகும்!

மதுரை பாபாராஜ்





0 Comments:

Post a Comment

<< Home