Monday, July 01, 2019

காலம் நகர்த்தும் காய்கள்!

எங்கோ பிறந்தவர்கள் எங்கெங்கோ வாழ்கின்றோம்!
இன்றிங்கே! நாளையெங்கே? யாரறிவார்? யார்சொல்வார்?
இன்றோ உயரத்தில் ! நாளையோ தாழ்விலே!
என்றிங்கே யார்யாரோ எப்படியோ என்றேதான்
நம்மால் கணிக்க முடியாது மானிடரே!
கண்மணியே! காலம் நகர்த்துகின்ற காய்கள்தான்
மண்ணக வாழ்வென் றுணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home