Saturday, July 06, 2019

குழந்தைகளே உற்சாகம்!

சோலையில் பூத்திருக்கும்  வண்ணவண்ண பூக்களைப்போல்
காலையில் பள்ளிக் குழந்தைகள் வண்வண்ணக்
கோலத்தில் சீருடை போட்டுத்தான் துள்ளிவரும்
காட்சிகள் உற்சாகம் தான்.

தாத்தாக்கள் பாட்டிகள் அம்மாக்கள் அப்பாக்கள்
போட்டிபோட்டு நாளும் பரபரப்பாய்ப்
பிள்ளைகளைப்
பள்ளியின் வண்டிகளில் ஏற்றி அனுப்புகின்ற
உள்ளமெல்லாம் உற்சாகந் தான்.

மாலைப் பொழுதிலே பள்ளியின் வண்டிகள்
நேரத்தில் வந்துநிற்க காத்திருப்போர் கூட்டமோ
ஆரவாரம் செய்தே கைபிடித்தே  வீட்டுக்கு
ஈரமனம் கொண்டேதான்  பையைச் சுமந்துகொண்டு
வீரநடை போடுவார் காண்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home