Sunday, July 21, 2019

சட்டிச் சோறு சுவையே சுவை!

கடாயில் கறிகாயை நன்கு வறுத்து
கடாயிலே சோறைப் பிசைந்தே உருட்டி
அடடா அன்புடன் அம்மா கொடுப்பாள்!
மடமட வென்றே உருண்டையை உண்டால்
சிறப்புச் சுவையுடன் மெய்மறப்போம் நாமே!
உடலும் சிலிர்க்கும் உணர்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home