Friday, July 12, 2019

பூனையும் எலியும்!

எலியைப் பூனை பிடித்ததும் அந்த
எலியை நழுவவிட்டு ஓடவிட்டுப் பாயும்!
எலியைப் பிடித்து மறுபடியும் விட்டே
கிலிகொள்ள வைத்துப் பிடிக்குமாம் உண்ண!
எலியாக ஓடவைத்த  நிலையில் இங்கே
கிலிகொள்ள வைக்கிறதே சூழ்நிலைச்  சொற்கள்!
பலியானால் நிம்மதி தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home