Thursday, July 11, 2019

கூட்டில் முடக்கம்!

காலத்தால் கட்டுண்டோம் கட்டுண்ட காரணத்தால்
கோலங்கள் ஏற்றே பயணத்தை மேற்கொண்டோம்!
காலக் கரங்கள் உருட்டிவிட்டு வேடிக்கை
காட்டி அலையவிட்டே வாழ்வின் இறுதியில்
காட்சிப் பருவம் முதுமைத் தனிமையை
ஏற்பதற்குக் கட்டளை இட்டதையும் ஏற்றதால்
கூட்டில் முடங்கினோம் கூறு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home