Thursday, July 11, 2019

உடைக்காதே!

சிதறிவிட்ட  முத்துகள் மாலையாகக் கூடும்!
உதறிவிட்ட தேன்துளிகள் ஒன்றுசேரக் கூடும்!
சிதைந்துவிட்ட கோலங்கள் சீராகக் கூடும்!
உடைந்துபோன உள்ளம் உடைந்துபோன பானை!
உடைந்தால் உடைந்தது தான்.

கடைக்குக் கடையோ கவர்ச்சியான பொம்மை!
கிடைத்ததில் நிம்மதி காணாமல் இங்கே
கிடைக்காத ஒன்றிற்கே ஏங்குகின்ற வாழ்க்கை!
கிடைக்காத  பொம்மை கிடைக்கவைக்க  அம்மா!
கிடைத்ததைப் போட்டுடைப்ப தேன்?


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home