Saturday, July 13, 2019

மலரும் நினைவு!

பல ஆண்டுகளுக்கு முன் அம்மா உருட்டித்தர
பிள்ளைகள் சாப்பிட்டோம்!

அம்மாவோ உட்கார்ந்தாள்! பிள்ளைகள் எல்லோரும்
அம்மாவின் முன்னால் அமர்ந்தனர்! முற்றத்தில்
வெண்ணிலா பார்த்தது! அம்மாவின் முன்னாலே
கிண்ணம் நிறைய சுவையாய்ப் பிசைந்தசோறு!
அம்மா உருட்டி உருட்டி உருண்டையாக்கி
அந்த நிலவொளியில் ஒவ்வொரு பிள்ளைக்கும்
அன்புடனே தந்தாள் வரிசையாக! இன்பமுடன்
புன்னகை பூக்க அவள்தந்தாள்! போட்டிபோட்டு
அன்னத்தைப் பிள்ளைகள் வாங்கித்தான் சாப்பிட்டோம்!
தந்தை உடனிருந்தார்! தாய்தந்த சோறுண்டார்.!
அன்புத்தாய் மிஞ்சி இருந்ததைச் சாப்பிட்டாள்!
என்னுள்ளம் ஏங்குதே அப்படிச் சாப்பிட!
அம்மா வருவாளா? வந்தே தருவாளா?
நெஞ்சில் மலர்ந்த நினைவு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home