Saturday, October 26, 2019

இப்படித்தான் கொண்டாட்டம்!

நம்பிக்கை உள்ளதோ இல்லையோ இல்லத்தார்
அன்பில் கலந்தேதான் ஒன்றாக நின்றேதான்
சின்னஞ் சிறுசுகள் உள்ளம் மகிழ்ந்திருக்க
கொண்டாடி ஊருடன் ஒத்துவாழ்ந்தால்  நிம்மதி!
நம்கொள்கை நம்முடன் தான்.

புராணக் கதைகளை நம்பியிங்கே யாரும்
தயாராய் கொண்டாடும் போக்கில்லை! ஏதோ
விதவிதமாயப் புத்தாடை போடுவதும் பண்டம்
விதவிதமாய்ச் செய்தே உறவுகள் சேர்ந்து
படம்பிடித்துப் பார்க்கும் பொழுதுபோக்காய் இங்கே
படபடப் பட்டாசைப் பிள்ளைகள் போட்டு
அகமகிழ்வு கொள்கின்றார் காண்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home