Sunday, December 15, 2019

திரு& திருமதி துரைசாமி திருவாசகம் இணையர் பல்லாண்டு வாழ்க!

திருவா சகத்தில் உருகிய சான்றோன்!
திருக்குறளின் நல்லறத்தை இல்லறத்தில் போற்றும்
பெருமைக் குரிய துரைசாமி அய்யா
அருமைத் துணைவி நிலமங்கை அம்மா
இருவரும் ஆந்ரா விசாகை நகரில்
பெருமையுடன் வாழும் இணையர் குடும்பம்
அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

பூவுடன் சேர்ந்திருக்கும் நாரும் மணப்பதைப்போல்
பாவியற்றும் நானும் அவரது நட்பிலே
நாளும் திளைக்கின்றேன்! நான்பெற்ற பேறென்பேன்!
வாழ்க்கைப் பிறவிப் பயன்.

ஆங்கிலத்தில் எந்தன் அறத்துப்பால் நூல்வர
பாங்குடன்  பேருதவி  செய்திட்ட பண்பாளர்!
வான்மழை உள்ளம் இவரது உள்ளமாகும்!
ஆண்டுபல வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்
வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home