Saturday, January 11, 2020

மாறத் தெரிந்தால் வாழலாம்!

காட்டுக்குள் வாழ்ந்தவை நாட்டுக்குள் வந்தன!
நாட்டுக்குள் வாழ்ந்தவர் காட்டுக்குள் சென்றனர்!
நாட்டில் அமைந்ததற் கேற்ப அனுசரித்து
காட்டில் இருந்தவை வாழ்ந்தன ஏற்றேதான்!
காட்டுக்குள் சென்றவர்கள் அங்கே அனுசரித்து
வாழ  புலம்பி முகஞ்சுழித்து காட்டுவாழ்க்கைத்
தேவையில்லை என்றுவந்தார் மீண்டுந்தான் நாட்டுக்கு!
தேவை சகிக்கின்ற பண்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home