Friday, January 10, 2020

அம்மாவின் முடிவு

அம்மாவின் அந்த ஐம்பத்திரண்டு நாள்கள்!

தெய்வத்திரு.தேவகி முத்துசுப்பு

18.12.1983 -- 13./14.02.1984

கென்னட் மருத்துவமனை மதுரை !

கோமா. COMA

ஏகா தசிமுடிந்தே என்தாய் நினைவிழந்தார்!
வேகமாய் நாங்கள் சிகிச்சைக்குச் சேர்த்துவிட்டோம்!
 வந்தார் மருத்துவர்கள்  பார்த்தனர்! கைபிசைந்தே
நின்றனர் கோமாவில் சென்றுவிட்டார் என்றனர்.!
கண்கள் அசைகிறது மூச்சு விடுகின்றார்
கைகால் அசைகிறது ஆனால் உணர்ச்சியில்லை!
என்ன பேசினாலும் தாய்க்கோ விளங்கவில்லை!
சுற்றிநின்று பார்த்தோம் நாம்.

ஐம்பத் திரண்டாம் நாளில் மருத்துவர்
வந்தார் சிகிச்சையை வீட்டில் தொடரலாம்
என்றார் மருத்துவக் கூடத்தை
 விட்டகன்றோம்!
வந்துவிட்டோம் வீட்டுக்(கு! ) இரவிலே அம்மாவோ
தந்தை படத்தை விழியால் சுழற்றித்தான்
என்னமாய் பார்த்தார்! ஒருமுறை சுற்றிநின்ற
எங்களையும்   பார்த்தார்! மறுநாள் இறந்தார் !
தாயின் முடிவே இஃது.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home