Wednesday, February 12, 2020

குறள் 848:

ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.

கலைஞர் உரை:

சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத  நோயாகும்.

இப்படியும் மாந்தர்!

சொன்னாலும் கேட்கமாட்டார்; தன்னால் புரியாது!
இந்த நிலையுள்ள மாந்தருக்கோ என்றென்றும்
அந்த நிலையே வாழ்க்கை முழுவதும்
நின்று நிலைக்கின்ற நோய்.

மதுரை பாபாராஜ்





0 Comments:

Post a Comment

<< Home